அலெர்ட்.. இந்த 3 Apps உங்க போன்ல வச்சிருந்தா உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லனா..? – மத்திய அரசு எச்சரிக்கை..

20 Dangerous Apps

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தவறாக பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை சுருட்டும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த பின்னணியில், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


உலகம் முழுவதும் இன்று ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தொலைபேசி அழைப்புகள் மட்டுமின்றி, ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம், மேப்ஸ், வங்கி சேவைகள் என பெரும்பாலான அன்றாட தேவைகளும் ஸ்மார்ட்போனிலேயே நிறைவேறும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், இதே வசதியை பயன்படுத்தி புதுப்புது சைபர் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

சிறிது கவனக் குறைவு ஏற்பட்டாலும், மொத்த வங்கி இருப்பும் ஒரே நொடியில் காலியாகும் அபாயம் இருப்பதாக சைபர் குற்றத் தடுப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C – 14C அமைப்பு) அவ்வப்போது எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஸ்மார்ட்போனில் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி, மூன்று ஸ்க்ரீன் ஷேரிங் செயலிகளை அரசு பட்டியலிட்டுள்ளது.

தவிர்க்க வேண்டிய 3 செயலிகள்:

  • AnyDesk
  • TeamViewer
  • QuickSupport

ஏன் இந்த செயலிகள் அபாயம்? இந்த செயலிகள், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு செல்போனை முழுமையாக கட்டுப்படுத்தும் வசதியை வழங்குகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி, சைபர் கிரைம் கும்பல்கள் செல்போனை கைப்பற்றி, OTP, வங்கி விவரங்கள், UPI அணுகல் போன்றவற்றை திருடி, நிதி இழப்பை ஏற்படுத்துகின்றனர். இதனால், இந்த மூன்று செயலிகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், யாராவது தொலைபேசி மூலம் இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்ய கூறினால் அதை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு அறிவுரை:

* தெரியாத நபர்களின் அழைப்புகளை நம்ப வேண்டாம்.

* ஸ்க்ரீன் ஷேரிங் அனுமதி ஒருபோதும் வழங்க வேண்டாம்.

* சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனே 1930 என்ற சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம்.

Read more: 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 150/80 என்ற ரத்த அழுத்தம் இருப்பது ஆபத்தானதா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..?

English Summary

If you have these 3 apps on your phone, delete them immediately.. or not..? – Central Government

Next Post

9% வட்டியிலேயே தனிநபர் கடன்..!! SBI முதல் HDFC வரை..!! வட்டி விகிதங்களில் வந்த அதிரடி மாற்றம்..!!

Wed Dec 24 , 2025
2025-ஆம் ஆண்டு இந்தியக் கடன் சந்தையில் தனிநபர் கடன் வாங்குவோருக்கு ஒரு நிம்மதியான ஆண்டாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்த வட்டி விகிதங்கள், இந்த ஆண்டில் கணிசமாக குறைந்துள்ளதால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘ரெப்போ’ விகிதத்தை சுமார் 1.25 சதவீதப் புள்ளிகள் வரை குறைத்தது. இது வங்கிகளின் செயல்பாட்டுச் செலவைக் குறைத்ததால், அதன் பலன் மறைமுகமாகத் தனிநபர் கடன் […]
Loan 2025

You May Like