இந்த நடிகருக்குத்தான் இதுவரை இளையராஜா இசையமைக்கவில்லையாம்…

அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா இந்த நடிகர் படத்தில்மட்டும் இதுவரை இசையமைத்ததில்லை.


தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி என தென்னிந்தியாவின் பலமொழிகளில் இசையமைத்து முடிசூடா மன்னனாக இருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற உயரிய விருதுகள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் ஏராளமான பாடகர்களுடன் பணியாற்றியிருக்கின்றார். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ. என். வி. குறுப்பு, சிறீகுமாரன் தம்பி, வெட்டூரி சுந்தரராம மூர்த்தி, ஆச்சார்யா ஆட்டாரியா, சிறிவெண்ணிலா சீதாராம சாஸ்த்ரி, சி. உதய சங்கர் மற்றும் குல்சார் என பலருடன் பணியாற்றியுள்ளார்.

பாரதிராஜா, எஸ். பி. முத்துராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே. பாலச்சந்தர், மணிரத்னம், சத்யன் அந்திக்காடு, பிரியதர்சன், ஃபாசில், வம்சி, கே. விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலா, சங்கர் நாக், மற்றும் ஆர். பால்கி என எல்லா இந்திய இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.

Mani Ratnam at the Museum of the Moving Image

இசைஞானி, மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் இளையராஜா, தமிழ் சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். ஹீரோக்களின் கால்ஷீட்டுகள் கூட கிடைத்து விடும். ஆனால் இளையராஜாவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்பவே கஷ்டம். 1986ல் முதன் முதலில் தமிழ் திரைப்பட பாடலை கணினி மூலம் பதிவு செய்து சாதனை படைத்தவர் இசைஞானி இளையராஜா. கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ என்ற திரைப்படம்தான் இந்த சாதனை பெற வைத்தது.

தன்னுடைய 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகரின் படத்தில் மட்டும் இசையமைக்கவில்லை என்றால் நம்ப முடிகிறதா. ஆம் இளையராஜா தன்னுடைய இத்தனையாண்டு சினிமா வாழ்க்கையில் அப்போதைய வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த டி.ராஜேந்தருடன் மட்டும் சேர்ந்து பணிபுரியவே இல்லை.

T rajendar

1980 ஆம் ஆண்டு ஒரு தலை ராகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் டி.ராஜேந்தர். தன்னுடைய அடுக்கு மொழி வசனங்களால் மக்களிடையே பிரபலமடைந்த இவர் படங்களை எழுதி, இயக்கி, நடிப்பதோடு மட்டுமின்றி பாடல் வரிகளையும் எழுதி வந்தார். இவர் தான் இயக்கி நடித்த முதல் 26 படங்களுக்கும் இவரே இசையமைத்து இருக்கிறார்.

இவர் கடைசியாக இயக்கி நடித்த வீராசாமி படத்திற்கு கூட இவரே தான் இசையமைத்து இருக்கிறார். இப்படி கதை எழுதுவது, இயக்குவது, பாடல் இசைப்பது, பாடல் எழுதுவது என எல்லாத்தையும் இவரே செய்ததால், மற்ற இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணிபுரியவே இல்லை. இதனால் தான் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவே இல்லை.

Next Post

மீண்டும் சீரியலில் நடிக்கும் அர்னாவ்…

Thu Nov 3 , 2022
செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்க உள்ளதாக இன்ஸ்டாவில் அர்னாவ் போட்ட போஸ்ட் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழமைந்தவர் நடிகர் அர்னாவ். செல்லம்மா சீரியலில் சித்து என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகின்றார்.அன்ஷிதா என்பவர் ஜோடியாக நடிக்கின்றார். இருவரும் நெருங்கி பழகி வருவமாக சர்ச்சை எழுந்த நிலையில் அவர் பேச்சை கேட்டு தன்னை அடித்ததாக திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகார்அளித்தார். இதையடுத்து இவர்களின் […]
அர்ணவ்

You May Like