அரசு அலுவலகங்களுக்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதிவேடு ஒன்றை பராமரிக்க அலுவலர்களுக்கு தமிழக தமிழக உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாகப் பெறப்படும் குறைகளைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டன அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி மூன்று (3) நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன், மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைக் கையாளும்போது, அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்களில் வகுத்தளிக்கப்பட்ட அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாது கடைபிடிக்கப்பட வேண்டும். நடைமுறைகளும், அறிவுறுத்தங்களும் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட அனைத்து அரசு அலுவலகக்களும் அலுவலகத்தில் பெறப்படும் குறைகளைவு மனுக்களைப் பதிவு செய்திட குறைகளைவு மனுப்பதிவேடு ஒன்றினை படிவத்தில் உள்ளவாறு பராமரித்தல் வேண்டும்.
அப்பதிவேட்டில், அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்திடல் வேண்டு அப்பதிவேட்டினை மாத இறுதியில் அவ்வலுவலகத் தலைமை அலுவலர் ஆய்வு செய்து நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்திட ஆவன செய்திடல் வேண்டும். மேற்படி குறைகளைவு மனுப்பதிவேடு, அத்துறையின் துறைரீதியிலான வார இருவார மற்றும் மாதாந்திர ஆய்வு மற்றும் மனித வள மேலாண்மை ஆய்வுத் துறையின் வருடாந்திர ஆய்வுகளின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்கள்…! டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு…!