தமிழ்நாடு முழுவதும் 3 கோடி வீடுகளில்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 95 ஆயிரம் பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றம் செய்து மின்சாரத் துறை சாதனை படைத்துள்ளது. மின்னஞ்சல் மூலமாக 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 99.5 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.


இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய வடிவமைப்போடு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடி வீடுகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

பயணிகளே இனி ருசியா சாப்பிடலாம்..!! இந்த உணவகங்களில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

Thu Apr 13 , 2023
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக நிறுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், சென்னையில் இருந்து நெல்லை கோவை, நாகர்கோவில், செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவன் […]
Setc

You May Like