மறுபடியும் முதல்ல இருந்தா.. இந்தியாவில் ஒரே நாளில் 7,830 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 6,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…

corona

இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.. நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,676ஆக இருந்த நிலையில், இன்று 7,830ஆக உயர்ந்துள்ளது.. கொரோனா காரணமாக மேலும் 16 பேர் இறந்த நிலையில், சிகிச்சை எண்ணிக்கை 40,215ஆக உயர்ந்துள்ளது.. நேற்று 3,761 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று 4,692 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,20,66,24,326 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

RUPA

Next Post

போட்டியாளரின் மோசமான செயலால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மோகன்லால்..!! பெரும் பரபரப்பு

Wed Apr 12 , 2023
ஹிந்தியில் பிக்பிரதர் என்கிற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, துவங்கப்பட்டது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்நிகழ்ச்சி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டிலை வென்றார். இது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இது ஒரு புறம் […]
போட்டியாளரின் மோசமான செயலால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மோகன்லால்..!! பெரும் பரபரப்பு

You May Like