மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மன நிறைவான ஆட்சி நடைபெறுகிறது. மன நிறைவு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.
யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மின்சார திட்டம் என்றால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கிறது. குடிநீர் திட்டத்தில் எல்லோருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படாது. ஜாதி, சமூகம், மாமா, அண்ணா என்று எந்த விதமான வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார்.
பாகுபாடு என்பது இல்லை என்றால் சமுதாயத்தில் மன நிறைவு ஏற்படும் நாள் மனக்கசப்பு கொண்டவர்கள் அழுக்கான சிந்தனையுடன் சில மாநிலங்களில் எப்படி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
மேலும் பேசிய பிறந்தநாள் நரேந்திர மோடி நமது தமிழ்நாட்டில் ஏரவல்லன், காடர் கொண்டா, கபூஸ், மலை வேடன்,பல்லயன் முடுகர் என மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், யாரும் இவர்களின் மீது அக்கறை காட்டவில்லை. தமிழகத்தில் மாவிலன் நைதி தோட்டி வல்லோன் ஜக்களி உள்ளிட்ட ஜாதி மக்கள் என்ன ஆனார்கள்? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.