34 நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், முன்னதாகவே பல நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி கூபா, கோஸ்டரிகா, ஸ்லோவெனியா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், பெல்ஜியம், அன்டோரா, பிரிட்டன், லக்சம்பர்க், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தன் பாலின திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மெக்சிகோ, மால்டா, நார்வே, தென்ஆப்பிரிக்கா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் தைவான் முதல் நாடாக தன் பாலின திருமணத்தை அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.