மனைவிக்கு போட்ட வலையில், மாமியார் சிக்கிய சம்பவம்..!! தூக்கி அடித்த மின்சாரம்..!! தெறித்து ஓடிய மருமகன்..!!

மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்ட கணவனின் வலையில், மாமியார் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் சாய்கேடா கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால், வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர் சண்டைகளால் அண்மையில் கணவன் வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவி வீட்டைவிட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவன், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, உடனே புறப்பட்டு தன் மனைவி வசிக்கும் மாமனாரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

மனைவிக்கு போட்ட வலையில், மாமியார் சிக்கிய சம்பவம்..!! தூக்கி அடித்த மின்சாரம்..!! தெறித்து ஓடிய மருமகன்..!!

அங்கு யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கேட்டில் மின்சாரத்தைப் பாயவிட்டுள்ளார். அதை தன் மனைவி தொட்ட நொடியில் இறந்துவிடுவார் என நினைத்து அங்கேயே காத்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக மனைவியின் தாயார் அந்த கேட்டை திறந்திருக்கிறார். அதில், மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.

CHELLA

Next Post

நேற்று புதுமாப்பிள்ளை .. இன்று மாமியார் வீடு …

Tue Oct 11 , 2022
சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டுவது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ நேற்று வைரலானது. பள்ளி சீருடையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவிக்கு மாணவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ நேற்று பேசு பொருளாக […]
அதிர்ச்சி..!! பஸ் ஸ்டாப்பில் பிளஸ்2 மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவன்..!!

You May Like