திருமணம் நிகழ்ந்த சில வாரங்களில் மாரடைப்பால் இறந்த புதுமாப்பிள்ளை..!

பஞ்சாப் மாநில பகுதியில் உள்ள மோகாவின் பட்டோ ஹிரா சிங் கிராமத்தில் வசிப்பவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதற்காக அம்ரி கனடா சென்றார். அங்குள்ள சாரேவில் என்ற பகுதியில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் முடிந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமான சில வாரத்தில் அவர் உயிரிழந்தது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து அம்ரியின் உடலானது தகனம் செய்வதற்காக அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படுமா என்பது பற்றிய எந்த தகவல்களும் அவரது குடும்பத்தினர் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் நடந்த அடுத்த சில வாரங்களிலேயே இளைஞர் இறந்த செய்தி அவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

#பாலமேடு: ஐந்து வருடமாக காளைகளை அடக்கி வீரராக வலம் வந்த இளைஞர் இறந்த சோகம்..!

Wed Jan 18 , 2023
பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். பாலமேட்டைச் சேர்ந்த இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் ராஜேந்திரன், தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான காளைகளை அடக்கி சிறந்த வீரராக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட போட்டியில் வாடிவாசலில் காத்திருந்த […]

You May Like