பஞ்சாப் மாநில பகுதியில் உள்ள மோகாவின் பட்டோ ஹிரா சிங் கிராமத்தில் வசிப்பவர் அமர்பிரீத் சிங் அம்ரி (28). கபடி வீரரான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், திருமணம் செய்து கொள்வதற்காக அம்ரி கனடா சென்றார். அங்குள்ள சாரேவில் என்ற பகுதியில் அவர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்ரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமான சில வாரத்தில் அவர் உயிரிழந்தது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அம்ரியின் உடலானது தகனம் செய்வதற்காக அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்படுமா என்பது பற்றிய எந்த தகவல்களும் அவரது குடும்பத்தினர் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் நடந்த அடுத்த சில வாரங்களிலேயே இளைஞர் இறந்த செய்தி அவர் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.