நாடு முழுவதும் மொத்தம் 24,24,540 நீர்நிலைகள்…! முதல் முறையாக கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசு…!

இந்தியாவில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குளங்கள், ஏரிகள் என இயற்கையாலும் மனிதர்களாலும் உருவாக்கப்பட்ட நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் நீர் ஆதாரங்களின் விரிவான பட்டியலை வழங்குவதோடு, நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு குறித்தத் தரவுகளையும் சேகரித்துள்ளது.

image 2

நாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் விரிவான தரவுகளை அறிய, 6-வது சொட்டு நீர்ப்பாசன கணக்கெடுப்புடன் இணைந்து, இந்த “நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு” தொடங்கப்பட்டது. நீர்நிலைகளின் வகை, ஆக்கிரமிப்புகளின் நிலை, பயன்பாடு, சேமிப்புத் திறன் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாட்டில் இல்லாத அனைத்து நீர்நிலைகளையும் உள்ளடக்கியது. பாசனம், தொழில், மீன் வளர்ப்பு, வீட்டுப்பயன்பாடு, பொழுதுபோக்கு, நிலத்தடி நீர் போன்ற நீர்நிலைகளின் அனைத்து வகையான பயன்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

நாட்டில் 24,24,540 நீர்நிலைகள் கணக்கிடப்பட்டுள்ளன, அவற்றில் 97.1% (23,55,055) கிராமப்புறங்களிலும், 2.9% (69,485) நகர்ப்புறங்களிலும் உள்ளன.நீர்நிலைகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த நீர்நிலைகளில் 63% உள்ளன.

நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கையில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், திரிபுரா மாநிலங்கள் முதல் 5 இடத்தில் உள்ளன. கிராமப்புறங்களில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பு குறித்த அறிக்கை ஜல்சக்தித் துறையின் இணையதளத்தில் உள்ளது: https://jalshakti-dowr.gov.in. இந்திய அளவில் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு: https://jalshakti-dowr.gov.in/document/all-india-report-of-first-census-of-water-bodies-volume-1/

மாநில வாரியான அறிக்கையைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு: https://jalshakti-dowr.gov.in/document/state-wise-report-of-first-census-of-water-bodies-volume-2/

Vignesh

Next Post

பனங்கிழங்கில் இவ்வளவு விஷயம் இருக்கா?... அந்த மாதிரி விஷியங்களுக்கு இனி வயகரா தேவையில்லை!...

Mon Apr 24 , 2023
தாம்பத்யத்தை அதிகரிக்க செய்ய வயகராவை பயன்படுத்துவதற்கு மாற்றாக இயற்கையாக கிடைக்கும் இதனை சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனங்கிழங்கு, பதநீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, நார் என அனைத்திலும் மருத்துவ குணம் கொண்டது. இது மனிதர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது. பனைமரம் அதிக காலம் உயிர் வாழும். இதனை கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து சிறு சிறு […]
WhatsApp Image 2023 03 19 at 3.25.11 PM

You May Like