செல்ஃபி எடுக்க முயன்ற இந்திய சுற்றுலாப் பயணியை கொடூரமாக தாக்கிய புலி..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

tiger attack thailand jpg 1

தாய்லாந்தில் உள்ள ‘டைகர் கிங்டம்’ எனும் விலங்குப் பூங்காவில், ஒரு இந்திய சுற்றுலாப் பயணி புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது திடீரென தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த சம்பவம் பார்வையாளர்களின் பாதுகாப்பு, மற்றும் விலங்குகளை சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக பயன்படுத்தும் நடைமுறை குறித்து பலரிடையே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்திய பயணிக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன என்றும், அவருக்குத் துரிதமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீடியோவில், சங்கிலியால் கட்டப்பட்ட புலியை இந்திய சுற்றுலா பயணி ஒருவர் முதுகில் தட்டியபடி அழைத்து செல்கிறார். அவருடன் புலி பயிற்சியாளர் கையில் ஒரு குச்சியுடன் இருக்கிறார். பின்னர், செல்ஃபி எடுக்க புலி அருகே மண்டியிட்ட சுற்றுலாப் பயணியை புலி கொடூரமாக தாக்க முயன்றது. அவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பூங்கா ஊழியர்கள் அவரை புலியிடமிருந்து காப்பாற்றினர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சுற்றிலா பயணிகள் அலறி அடித்துச் சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், விலங்குகளை சுற்றுலாவுக்காக காட்சிப்படுத்தும் முறைகளும், அவற்றில் நிகழும் வன்முறை குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், “புலி போன்ற காட்டு விலங்குகளை பூங்காக்களில் பயன்படுத்தி அவற்றின் இயல்பை மாற்றும் நிலைப்பாடுகள் தவறானவை. இவை விலங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் ஆபத்தாக இருக்கலாம்.” என்றனர்.


Read more: “பாமகவின் பொருளாளர் நான் தான்”..!! “ராமதாஸின் அறிவிப்பு செல்லாது”..!! திலகபாமா பரபரப்பு பேட்டி..!!

Next Post

டிகிரி போதும்.. நியூ இந்தியா அஷ்சூரன்ஸ் கம்பெனியில் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Fri May 30 , 2025
மத்திய அரசின் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் (The New India Assurance) நிறுவனத்தில் காலியாக உள்ள 500 அப்ரண்டிஸ் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 500 கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியறிவு அவசியமாகும். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.06.2025 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க […]
job

You May Like