அந்த மனசு இருக்கே.. அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு மெதுவடை தேங்காய் சட்னி கொடுத்த இந்திய பெண்..!! ரியாக்ஷனை பாருங்க..

us worker meduvada treat

அமெரிக்காவில் சாலை போடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு, இந்திய பெண் ஒருவர் மெதுவடை மற்றும் தேங்காய் சட்னி உணவாக அளித்த நிலையில், அதை பார்த்த அந்த தொழிலாளர்கள், “இப்படி ஒரு உணவா! என மெய்சிலிர்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில், ஒரு இந்திய பெண் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தென்னிந்தியாவில் மிக பிரபலமான மெதுவடையை அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சமைத்து, அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு கட்டடத் தொழிலாளர்களுக்கு அந்த உணவை பரிமாறினார். இரண்டு தட்டுகளில் மெது வடை மற்றும் தேங்காய் சட்னி வைத்துக் கொண்டு வந்த அவர், எதார்த்தமான சிரிப்புடன் தொழிலாளர்களிடம் சென்று உணவை வழங்குகிறார்.

அந்தக் கணம், தொழிலாளர்கள் ஆச்சரியத்துடன் உணவைப் பார்த்து, “இது என்ன?” எனக் கேட்கின்றனர். அதில் ஒருவர், வடை வடிவத்தை பார்த்து, “இது டோனட் மாதிரியா?” என சிரித்து கேட்கிறார். உடனே அந்த பெண், “இல்லை, இது மெது வடை; இது காரமானது, இனிப்பல்ல” என்று கூறி தெளிவாக விளக்குகிறார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. பலரும் இந்த மனிதநேய செயலை பாராட்டியுள்ளார்கள்.

அந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர், “இந்தியா என்பது மனிதநேயமும், அன்பும் நிறைந்த நாடு. அங்கு வறியவர்களோ, விருந்தாளிகளோ அல்லது வேலைக்காரர்களோ என்ற வித்தியாசமின்றி பலரும் உணவு அல்லது உதவிகளை நெஞ்சார வழங்குவார்கள். இப்படி உணவு பகிர்தல் போன்ற அன்பான செயல் இந்தியாவில் வழக்கமானது” என கூறியிருந்தார்.

மற்றொரு பயனர் , இந்திய கலாச்சாரத்தில் ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்தால் அவரை மதித்து அன்புடன் நடத்த வேண்டும் என்பதுதான் பண்பாடு. அதே காரணம் போல, அந்த பெண் வெளிநாட்டிலும் அந்த மரபைப் பின்பற்றி வேலைக்காரர்களுக்கு உணவு கொடுத்துள்ளார்.

Read more: மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் புதிய மருந்து.. பக்க விளைவுகள் கிடையாது..!! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Next Post

உணவு டெலிவரி ஊழியருடன் லிவிங்கில் இருந்த துணை நடிகை..!! கணவர் இருக்கும்போதே காதலனுடன் குடித்தனம்..!! ஆவடியில் அதிர்ச்சி சம்பவம்..!!

Sat Jun 7 , 2025
சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). இவர், உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, இவர் ஆவடியைச் சேர்ந்த தொலைக்காட்சி துணை நடிகை (வயது 25) ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த துணை நடிகை ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சந்துருவுக்கும் துணை நடிகைக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், […]
Love 2025 1

You May Like