அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,03,265 அமெரிக்க டாலர்களாக உயர்த்த டிரம்ப் அரசு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புதிய திட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதற்கான செலவை கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக, ஹெச்-1பி விசாவை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்களுக்கே இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வரைவுத் திட்டம், திங்களன்று அமெரிக்காவின் ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கட்டணம், விசா […]

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணித்த மூன்று வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறிய அமெரிக்கா, அதற்கு பதிலடியாக ஈரானின் 80-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக […]

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்றிரவு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறினார். மேலும், “எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும்” ஈரானின் முக்கிய பகுதியான ‘கர்க் தீவு’ (Kharg Island) உட்பட அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம் என்றும் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அவர் எச்சரித்தார். அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து இரண்டாவது […]

1 மாதத்திற்கு மேல் மோதல் நடந்து வரும் நிலையில், ஒரு தற்காலிக போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவும் ஈரானும் அவசரமான மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. மோதலில் ஒரு பெரிய பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது.. டொனால்ட் டிரம்ப் ஒரு கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார், அது இப்போது செவ்வாய்க்கிழமை மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், உடன்பாடு எட்டப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மத்தியஸ்தர்கள் […]

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஏறக்குறைய ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். “பிரதமர் மோடி அவர்களே, நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் மோதலுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

ஈரானுக்கு எதிரான தொடர் போரை ஏப்ரல் 9-ம் தேதி முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இஸ்ரேலிய ஊடகங்கள் ஒரு அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காரணம் காட்டி, […]

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில், குறிப்பாக LPG விவகாரத்தில், குறிப்பிடத்தக்க சிக்கல்களை உருவாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக, சாமானிய மக்கள் இது குறித்து மிகுந்த கவலையில் உள்ளனர். இந்தியா LPG-யின் முக்கிய நுகர்வோராகத் திகழ்கிறது. ஆனால் நாட்டிற்குத் தேவையான எரிவாயுவின் பெரும்பகுதி இறக்குமதி மூலமே பெறப்படுகிறது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து நாட்டின் LPG உற்பத்தி 36 சதவீதம் அதிகரித்திருந்தாலும், […]

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்தது. அபுதாபி, துபாய், கத்தார், குவைத் ஆகிய இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் பதற்றம் அதிகரித்தது. இந்த ராணுவ மோதல் தீவிரமடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் பாபா […]