புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள முதலியார் பேட்டையில், 21 வயது பெண் ஒருவர் தனது பெயரில் யாரோ இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
அத்துடன் தன்னுடைய நண்பர்களுக்கு தேவையில்லாத குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளரான கீர்த்தி, இது பற்றி நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு உருவாக்கி, அந்த பெண்ணினுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது யார் என்று கண்டுபிடித்துள்ளார்.
இவையனைத்தையும் செய்தது அந்த பெண்ணுடைய முன்னாள் கணவர் மணிகண்டன் (23) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து நடத்திய விசாரணையில், அவருக்கும் இந்த பெண்ணிற்கும் இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், அப்பெண்ணின் மீது இருக்கும் கோபத்தால் அவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி அதில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.