இன்ஸ்டாகிராம் போலி கணக்கு.. மனைவியின் புகைப்படத்தை பதிவேற்றிய கணவர்..!

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள முதலியார் பேட்டையில், 21 வயது பெண் ஒருவர் தனது பெயரில் யாரோ இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி அதில் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். 


அத்துடன் தன்னுடைய நண்பர்களுக்கு தேவையில்லாத குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புதுச்சேரி சைபர் கிராம் போலீசாருக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளரான கீர்த்தி, இது பற்றி நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு உருவாக்கி, அந்த பெண்ணினுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது யார் என்று கண்டுபிடித்துள்ளார். 

இவையனைத்தையும் செய்தது அந்த பெண்ணுடைய முன்னாள் கணவர் மணிகண்டன் (23) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து நடத்திய விசாரணையில், அவருக்கும் இந்த பெண்ணிற்கும் இரண்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், அப்பெண்ணின் மீது இருக்கும் கோபத்தால் அவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி அதில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

#ஈரோடு: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!

Sun Jan 22 , 2023
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒருநாள் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மின்கம்பங்களில் தற்போது தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், நாகை மாவட்டத்தில் வசிக்கும் மின் வாரிய ஊழியரான சிவசங்கரன் என்பவர், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்புகளை கொடுப்பதற்கான பணிகளை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி சம்பவ […]
n46419082816743677004770bea92b24ec5d3727d3b9169a0afdb138910a73aa80653835818de26770ad652

You May Like