இடைநிலை ஆசிரியர் பயிற்சி..!! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் வெ.உஷாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) தனித்தேர்வர்கள் மே 9 முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏற்கெனவே தேர்ச்சி பெற்ற சான்றிதழ்கள், தேர்வுக் கட்டணம் மற்றும் இதரகட்டணத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.


தேர்வு கட்டணம் ஒரு பாடத்துக்கு ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 ஆகும். நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் ரூ.1000 கூடுதல் கட்டணம் செலுத்தி மே 15, 16ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

கோவையில் பயங்கரம்…..! ஓடும் பேருந்தில் வாலிபரை சரமாரியாக வெட்டிய கும்பல்…..!

Mon May 8 , 2023
கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்தவர் கமலேஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புளியங்குளம் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தகராறில் சந்தோஷ் என்பவரை கத்தியால் குத்தியாக சொல்லப்படுகிறது. இதில் சந்தோஷ்குமார் காயம் அடைந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு நடுவே தன்னை கத்தியால் குத்திய கமலேஷை பழிவாங்க சந்தோஷ திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூரில் இருந்து தீத்திபாளையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அரசு […]
murder 2

You May Like