ஐபிஎல் 2023 இன்று மாலை கல்கத்தா அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி…..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளிட்ட இரு அணிகளும் இன்று நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இந்த போட்டி மாலை 3:30 மணி அளவில் நடைபெறுகிறது மும்பை அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கல்கத்தாவை அந்த அணி சந்திக்கிறது. பாயிண்ட்ஸ் டேபிளில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரையில் 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தரவரிசை பட்டியலில் அந்த அணி 9வது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட்டும்-0.879 என்று மிகவும் பலவீனமாக இருப்பதால் மும்பை அணி வெற்றி மற்றும் அதிக ரன் மற்றும் விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியமாக இருக்கிறது.


இதுவரையில் 4 போட்டியில் விளையாடி உள்ள கல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று+0.711 நெட் ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது மும்பை அணியின் கடந்த சில சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த சூரியகுமார் யாதவ், இந்த சீசனின் ரன் எடுக்க தவறி இருக்கிறார். ஐசிசி தரவரிசை மற்றும் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆக இருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மும்பை ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை உண்டாக்கி உள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சூரியகுமார் யாதவ் 3 போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது இந்த ஐபிஎல் சீசனில் 3️ போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்காமல் இருப்பது அவருக்கு எதிராக மிகப்பெரிய விமர்சனமாக வெடித்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் அவர் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

.

Next Post

இந்த விஷயத்தில் தான் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாம்……! அட இதுல என்னய்யா பெருமை வேண்டி இருக்கு…..!

Sun Apr 16 , 2023
அதாவது கழிவு நீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் சமயத்தில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். இது தொடர்பாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆவடி மாநகராட்சி ஆணையர் மற்றும் ஆவடி காவல் துறை […]
TN govt 1

You May Like