ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கும் 2 லீக் ஆட்டங்கள்…..! வெற்றி பெறுமா சென்னை அணி…..?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. பிற்பகல் 3:30 மணி அளவில் நடைபெறும் 45 வது போட்டியில் லக்னோ அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. லக்னோவில் இருக்கின்ற ஏகானா விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.


புள்ளி பட்டியலை பொறுத்தவரையில் 3வது இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கும், 4வது இடத்தில் இருக்கும் சென்னை அணிக்கும் இந்த போட்டி மிகவும் அவசியம் என்பதால் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளுமே கடுமையாக போராடும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். கடந்த முறை நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 200 ரன்களை சேர்த்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை.ஆகவே இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் நிச்சயமாக மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல இன்று இரவு 7.30 மணி அளவில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் 46 வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணியை சந்திக்கிறது. புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி 6வது இடத்திலும், மும்பை அணி 7வது இடத்திலும் இருக்கின்றன. ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Next Post

பாஜக மகளிரணி நிர்வாகியுடன் தொடர்பு..!! லிவிங் டூ கெதரில் உதவி இயக்குனர்..!! லீக்கான ஆபாச ஃபோட்டோ..!!

Wed May 3 , 2023
திருச்சி மாநகரம் பொன்மலை அருகே திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் பாண்டியன் (38). இவர் சொந்தமாக, போர்வெல் அமைக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவர், பாஜகவில் இணைந்த பிறகு கட்சி பணிகளில் ஆர்வம் செலுத்தினார். அப்போது திருச்சியைச் சேர்ந்த பாஜக மகளிரணி நிர்வாகி ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். அவர் தனது மகள், கணவனை இழந்த நிலையில் சென்னையில் வசித்து வருவதாக கூறி இருக்கிறார். இதனையடுத்து இருவரும் அறிமுகமாகி கட்சி தொடர்பாக […]
பாஜக மகளிரணி நிர்வாகியுடன் தொடர்பு..!! லிவிங் டூ கெதரில் உதவி இயக்குனர்..!! லீக்கான ஆபாச ஃபோட்டோ..!!

You May Like