ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பிளே ஆப் சுற்றும் நுழைய போகும் கடைசி அணி எது? என்று முடிவு செய்யும் 2 இறுதிலீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. மும்பையில் வான் கடையை மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணி நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில், களமிறங்குகிறது.
அதோடு மட்டுமல்லாமல் அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை அந்த அணி தாக்க வைக்க முடியும். ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில், கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ள அந்த அணி இதில் வெற்றி பெற்றால் 9வது இடத்தைப் பெற்று ஆறுதல் பெற முடியும்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இன்னொரு போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் முதலிடத்தில் இருக்கின்ற குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன இன்றைய போட்டியில் மும்பை அணி மிகப்பெரிய வெற்றி பெற்றால், இந்த போட்டியில் பெங்களூரு அணி அதைவிட மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
ஆனால் மும்பை அணி தோல்வியை சந்தித்தால் பெங்களூர் அணி போட்டியை வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட இயலும். இரு அணிகளுக்கும் இந்த போட்டிகள் முக்கியமானவை என்பதால் இன்றைய போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.