ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த சூழலில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேரை ஈரான் தூக்கிலிட்டது. இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
இட்ரிஸ் அலி, ஆசாத் ஷோஜாய், ரசூல் அகமது ரசூல் ஆகிய மூவரும் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், நாட்டிற்குள் தீவிரவாத நடவடிக்கைகள் நடத்த உபகரணங்களை இறக்குமதி செய்ய முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த மரண தண்டனை துருக்கி எல்லைக்கு அருகிலுள்ள உர்மியா நகரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீல சிறைச் சீருடை அணிந்த நிலையில் மூவரும் உள்ள புகைப்படங்கள் ஈரான் நீதித்துறையால் வெளியிடப்பட்டன.
மனித உரிமைகள் அமைப்புகள், ஈரானை மரணதண்டனையை நிறைவேற்றும் விஷயத்தில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக குற்றஞ்சாட்டியது. சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட மனித உரிமை குழுக்களின் கூற்றுப்படி, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக அதிகமான மரணதண்டனை நிறைவேற்றும் நாடு ஈரான் ஆகும்.
Read more: இன்ஸ்டண்ட் காபி பார்வை இழப்பை ஏற்படுத்தும்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை..