ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு காரணமாக உடல் சிதறி பலியானோர் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அச்சத்தையும் சோகத்தையம் ஏற்படுத்தியுள்ளது. ஈரான் முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமாணி கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது இந்த படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அவரது உடல் டெஹ்ரானின் தெற்கு நகரான கெர்மான் என்ற இடத்தில் ஷாஹில் அல் […]

இஸ்ரேல்- ஹமாஸ் போர் உச்சமடைந்துள்ள நிலையில், கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதிக்கு உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலை அனுப்பி அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளதாக ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் […]

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் சட்டமாக உள்ளது என்று அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார். ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலிஸாரின் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது.. இதை தொடர்ந்து பெண்கள் பலரும் ஹிஜாப் அணியாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.. இதனால் பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியை கடுமையாக ஒடுக்கினர். இந்நிலையில் ஈரானின் வடகிழக்கு […]

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு விதமான கொடுமைகள் நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான தெஃரானில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப் ஒழுங்கான முறையில் அணியவில்லை என்று கூறி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஈரானில் செயல்பட்டு வந்த மத அறநெறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்தக் காவலர்கள் தாக்கியதில் […]

ஈரானில் பெண்கள் விளம்பரங்களில் இடம்பெறுவது தடை செய்யப்படுவதாக கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.. ஈரான் நாட்டில் ஒரு “கவர்ச்சியான” விளம்பரத்தில் ஒரு பெண் ஒரு தளர்வான ஹிஜாப்பில் மேக்னம் ஐஸ்கிரீமை சாப்பிடுவது போல் ஒரு விளம்பரம் வெளியானது.. இந்த விளம்பரத்திற்கு, ஈரானிய மதகுருக்களை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.. அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் டோமினோ மீது வழக்குத் தொடர அதிகாரிகளை வலியுறுத்தினார்… இந்த விளம்பரம் “பொது மரியாதைக்கு […]