மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா சசிகலா..? டிடிவிக்கு இபிஎஸ் கொடுத்த நோஸ் கட்..!!

Edappadi Sasikala 2026

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டி.டி.வி. தினகரன் இணைந்தது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. இந்த இணைப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலாவும் எங்களது கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்குவார்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தினகரனின் இந்த கருத்து, அதிமுகவில் மீண்டும் சசிகலாவுக்கு இடம் கிடைக்குமா அல்லது மறைமுகமாக அவர் கூட்டணிக்குள் கொண்டுவரப்படுவாரா என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியது.


தினகரனின் இந்த அறிவிப்பால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சசிகலா விவகாரத்தில் இபிஎஸ் தனது பிடிவாதமான நிலைப்பாட்டை தளர்த்துவாரோ என்ற யூகங்களும் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், இந்த அனைத்துக் கேள்விகளுக்கும், ஊகங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தனது பாணியில் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், சசிகலாவின் ஆதரவு மற்றும் அவர் கட்சிக்குள் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, அவர்களெல்லாம் கட்சியிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டவர்கள். கட்சியை சிதைக்க நினைத்தவர்களுக்கு இங்கே இடமில்லை. எனவே, சசிகலா குறித்துப் பேச வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது” என்று மிகவும் காட்டமாக தெரிவித்தார்.

Read More : அரசு நிலங்களில் வசிப்பவர்கள் கவனத்திற்கு..!! இனி இலவச பட்டா கிடைக்காது..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஷாக்கிங் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

Breaking : துணை வேந்தர்கள் நியமனம்.. சென்னை உயர்நீதிமன்ற ஆணை ரத்து.. உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Wed Feb 4 , 2026
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க் வகை சட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. இந்த உத்தரவை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது..  இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு […]
Supreme Court 2025 1

You May Like