இந்தியாவில் இப்படி ஒரு நகரமா..? அசைவ உணவிற்கு முற்றிலும் தடை..!! எங்கு தெரியுமா..?

பயணம் செய்யும்போது சுவையான உள்ளூர் அசைவ உணவைத் தேடுவார்கள். ஆனால், குஜராத்தில் அசைவ உணவை சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்ட ஒரு நகரம் உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் ‘உலகின் சைவத் தலைநகரம்’ (Vegan Capital of the World) என்று அறியப்படுவது போல இந்தியாவின் சைவ நகரமான குஜராத்தில் உள்ள பாலிதானா நகரத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1200 628

பாலிதானா உலகின் முதல் சைவ நகரம் – First Vegetarian City of the World ஆகும். குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லை. இந்த நகரத்தில் இறைச்சி, முட்டைகளை விற்பது அல்லது நுகர்வு நோக்கத்திற்காக விலங்குகளை கொல்வது முற்றிலும் சட்டவிரோதமானது. அதுமட்டும் இல்லாமல் இந்த நகரத்திற்கு இன்னொரு சிறப்பு உள்ளது. பாலிதானாவில் ஒரே மலையில் 900-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருப்பது உலக சாதனையாக உள்ளது. மேலும் அவர்களின் இரட்சகரான ஆதிநாதர் பாலிதானா மலைகளில் நடந்தார் என்று நம்பப்படுகிறது. அதனால், இந்த இடம் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும். சமண மதத்தின் தலமாக இருப்பதே இந்த இடம் சைவ நகரமாக இருப்பதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம்.

பாலிதானா 100 சதவீதம் சைவ உணவு உண்பதற்குப் பின்னால் உள்ள வரலாறு 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அப்போதில் இருந்து, 200 ஜைன துறவிகள் 250 இறைச்சிக் கடைகளைத் தடை செய்து, நகரத்தை இறைச்சியற்ற மண்டலமாக அறிவிக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமண மதத்தை பொறுத்தவரை மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது. முக்கியமாக விலங்குகளை இவர்கள் சார்ந்து வாழ்வதில்லை. சாப்பிடும் வழக்கமும் இவர்களிடம் இல்லை. நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளை கூட இவர்கள் தவிர்கிறார்கள்.

இப்படியான, சமண மதத்தை கடைப்பிடிப்பவர்களின் கோரிக்கைகள் மற்றும் உணர்வுகளை மதிக்கும் விதமாக பாலிதானாவில் இறைச்சியை அரசாங்கம் தடை செய்தது. நகரத்தில் இறைச்சி மற்றும் முட்டைகள் விற்கப்படுவதில்லை. ஆனால் பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு உட்கொள்ளப்படுகின்றன. பாலிதானாவுக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்திருந்தால், இங்குள்ள 11-12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில்களைக் காணலாம். பாலிதானாவின் பைரவ்நாத் சௌக் அருகே கால பைரவ் தேவ் கோவில் உள்ளது. அதேபோல சத்ருஞ்சய் மலை, ஹஸ்தகிரி ஜெயின் தீர்த்தம், கோபிநாத் கடற்கரை சுற்றுலாப் பயணிகளின் கவரும் மையங்களாக உள்ளன. இங்கு செல்லும் மக்கள் சுவையான குஜராத்தி சைவ உணவை சுவைக்க மறக்காதீர்கள்.

CHELLA

Next Post

சொந்தமண்ணில் சிங்கங்களின் மிரட்டல் பந்துவீச்சு!... தோனியின் ஸ்கெட்ச்சில் மடங்கிய மும்பை!... சிஎஸ்கே அசத்தல் வெற்றி!

Sun May 7 , 2023
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பெற்றது. ஐபிஎல் 16வது சீசனின் 49வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களில் நெஹல் வதேரா […]
csk

You May Like