முதல்வர் ரேசில் 3வது நபரா….? வெடித்தது சர்ச்சை கர்நாடக அரசியலில் பரபரப்பு….!

கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றும் அதனை கொண்டாட முடியாத சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த மாநிலத்தில் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் முதல்வர் நாற்காலியில் அமர போவது யார்? என்பதில் அந்த கட்சியினருக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.


எப்படியும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் என்பது முடிவாகிவிட்ட நிலையில், முதல்வர் நாற்காலியில் அமரப்போவது சிவகுமாரா அல்லது சித்தராமையாவா என்ற கடுமையான போட்டி நிலவுகிறது.

இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டத்தில் தொடர்ந்து, ஆலோசனை நடைபெற்று வருகின்ற நிலையில் கர்நாடகத்தின் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று அந்த கட்சியை சேர்ந்த 3வது முக்கிய நபர் ஒருவர் போர்க்கொடி தூக்கி இருக்கிறார். அதாவது, கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வரராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

Next Post

விஜய் போட்ட கண்டிஷன்..!! நொந்து போன வெங்கட் பிரபு..!! அவரு இல்லாம எப்படி..?

Tue May 16 , 2023
வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த கஸ்டடி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நினைத்த அவர் இப்போது மீண்டும் தமிழுக்கே திரும்பும் அளவுக்கு படத்தின் வசூல் சரிவை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைய இருக்கிறார் என்ற செய்தி தான் இப்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் […]
WhatsApp Image 2023 05 16 at 4.53.10 PM

You May Like