தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியது தேமுதிக கூட்டணியில் இருந்து மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவின் அறிவிப்புக்கு கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். அதே சமயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசியது தேமுதிக கூட்டணியில் இருந்து மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அவர் பேசுகையில், “கூட்டணியில் தேமுதிக தொடரும் என அதிமுக அறிவித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தேமுதிகவுக்கு 2026 ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம் அதிமுக தனது கடமையை செய்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக எழுத்துப்பூர்வமாக தான் கொடுத்திருந்தார்கள். அதிமுகவின் அறிவிப்பு தேர்தலை ஒட்டியே அமைந்துள்ளது. அதன்போல் எங்கள் நிலைபாடு தேர்தலை ஓட்டியே இருக்கும். ஜன.9 ஆம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததற்கு திமுக பொதுக்குழு மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். கேப்டன் மறைந்த போது முதல்வர் இறுதி மரியாதை செலுத்தி எங்களுடன் இருந்து துயரத்தை பகிர்ந்து கொண்டதை மறக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
Read more: மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…! தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு சீட்…!