வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 800 கி.மீ தூரத்தில் உள்ள நகரங்களை இணைக்கிறது. தற்போது, 136 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சௌகரியமான பயணத்திற்கு பெயர் பெற்றது.
இவற்றில் பயணிகளுக்கு உணவும் வழங்கப்படுகிறது. இதற்கும் சேர்த்து தான் டிக்கெட்டில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில், மைசூரு, நெல்லை ஆகிய நகரங்களுக்கு செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் காலை உணவில் அசைவு உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், IRCTC மொபைல் ஆப்பில் காட்டப்படும் பாப்-அப் மெசேஜ்ஜில் மதிய உணவு மற்றும் இரவு உணவில் தான் அசைவ உணவு ஆப்ஷன் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, பயணிகள் இதனை பார்க்க முடியும். எதற்காக திடீரென்று இந்த மாற்றம் என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த்ய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக காலை உணவில் அசைவ உணவுகள் காண்பிக்கப்படவில்லை எனவும், உணவு பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
Read more: சனி பெயர்ச்சி 2025: வக்ரமடையும் சனியின் பார்வை.. சந்தோஷமா.. சங்கடமா..? யாருக்கு ராஜயோகம்..?