இப்படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடனா..? சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது பக்தர்கள் செய்யும் காரியம்..!!

ஓதியத்தூர் கோயிலில் நேர்த்திக்கடனாக சாப்பிட்ட எச்சில் இலை மீது பக்தர்கள் உருளும் விநோத பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஒதியத்தூரில் பிரசித்தி பெற்ற விருபாக்ஷீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் மஹந்யாச விழா நடைபெற்றது. இதில், பூர்வ ஏகாதேச ருத்ரா அபிஷேக தீபாதரனை ஆகியவற்றை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஆத்தூர் கெங்கவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது.

இப்படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடனா..? சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது பக்தர்கள் செய்யும் காரியம்..!!

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான வேத விற்பனர்கள் 5 பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது. அதற்கு முன்பு விருந்து சாப்பிட உட்கார்ந்தவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். 5 பேரும் சாப்பிட்டு முடித்த பின் எச்சில் இலையை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டனர். தொடர்ந்து பல்வேறு வேண்டுதலுடன் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் எச்சில் இலை மீது உருளுதண்டம் போட்டு நேர்த்தி கடனை செலுத்தினர். உருண்டு முடித்த பிறகு அந்த எச்சில் இலைகளை தலைகளில் சுமந்து சென்று அப்புறப்படுத்தினர்.

இப்படியெல்லாம் ஒரு நேர்த்திக் கடனா..? சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது பக்தர்கள் செய்யும் காரியம்..!!

இந்த கோவிலில் எச்சில் இலை மீது உருளுதண்டம் போட்டும் நேர்த்திக் கடனை செலுத்தினால், பக்தர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், பக்தர்கள் இன்றும் வேண்டுதல் வைத்து எச்சில் இலை மீது உருளு தண்டம் போட்டனர்.

CHELLA

Next Post

பட்டப்பகலில் இளைஞர் செய்த செயலால் நடுரோட்டில் துடிதுடித்த பள்ளி மாணவி!

Thu Dec 15 , 2022
டெல்லி உத்தம நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய வயது 17. இவர் வீட்டிலிருந்து தன்னுடைய தங்கையுடன் பள்ளிக்கு சென்று கொண்டுள்ளார்.அப்போது அந்த வழியாக இருவர் பைக்கில் முகமூடி அணிந்து வந்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். ஆசிட் வீசியதால் படுகாயமடைந்த மாணவி, டெல்லியில் உள்ள சதாஜன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். […]
8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! விழிப்புணர்வு நிகழ்ச்சியால் விழித்துக் கொண்ட மாணவிகள்..!

You May Like