இஸ்ரேல் – ஈரான் 12 நாள் போரின் போது அயதுல்லா அலி காமெனியை கொல்ல சதி செய்ததாக இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், சமீபத்திய 12 நாள் மோதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியை கொல்வது தான் தங்களின் முக்கிய இலக்கு என்றும், ஆனால் தலைமறைவாகியதால் அவர் உயிர் பிழைத்தார் என்று கூறியிருந்தார்.
மேலும் “காமெனி எங்கள் பார்வையில் இருந்திருந்தால், நாங்கள் அவரை வெளியே எடுத்திருப்போம். ஆனால் ஈரானியத் தலைவர் அண்டர்கிரண்டிற்கு சென்று தலைமறைவாக இருந்தார். மேலும் தனது தளபதிகளுடனான தொடர்புகளை முறித்துக் கொண்டார். இதனால் அவரை குறிவைப்பது எளிதானதாக இல்லை” என்று தெரிவித்தார்.
போரின் போது தீவிர தேடுதல் வேட்டை
பல இஸ்ரேலிய சேனல்களில் நடந்த நேர்காணல்களில், போர் முழுவதும் இஸ்ரேல் காமெனியைத் தீவிரமாகத் தேடியதாக காட்ஸ் தொடர்ந்து கூறி வந்தார்.. “நாங்கள் நிறைய தேடினோம்.. ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.. இஸ்ரேலின் நோக்கம் ஆட்சி மாற்றம் அல்ல, மாறாக ஈரானின் தலைமையை சீர்குலைத்து மோதலின் போது அழுத்தம் கொடுப்பது தான்” என்று தெரிவித்தார்.
ஈரானிய உயர் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்
ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் முடிவடைந்த ஈரான் – இஸ்ரேல் மோதலில், இஸ்ரேல் விரிவான வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் பல உயர் ஈரானிய தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வான்வழி மேன்மையை பராமரித்து வருகிறது.. அணு மற்றும் ஏவுகணை திறன்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஈரானின் முயற்சிகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட “ஈரானுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள்” என்ற கொள்கையை அமல்படுத்தியதாகவும் காட்ஸ் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அனுமதி கோரப்படவில்லை
காமெனியை குறிவைக்க இஸ்ரேல் அமெரிக்காவின் ஒப்புதலைக் கோரியதா என்று கேட்டபோது, ” இதற்கு எங்களுக்கு அனுமதி தேவையில்லை” என்று காட்ஸ் பதிலளித்தார். கமெனிக்கும் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கும் இடையே ஒப்பீடு செய்தார். “அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். அவர் மறைந்த நஸ்ரல்லாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்… அவர் அதை செய்ய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்” என்று கூறினார்.
ட்ரம்பின் அச்சுறுத்தல் மற்றும் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்
இஸ்ரேல் – ஈரான் மோதலின் போது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் காமெனிக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்தார். ஜூன் 17 அன்று, ட்ரம்ப் சமூக ஊடக பதிவில் , “‘உச்ச தலைவர்’ என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்… நாங்கள் அவரை வெளியே அழைத்துச் செல்லப் போவதில்லை (கொல்லப் போவதில்லை!), குறைந்தபட்சம் இப்போதைக்கு அல்ல” என்று பதிவிட்டார். பின்னர் அவர் அறிக்கையை மறுத்து, ஆட்சி மாற்றம் நோக்கமல்ல என்பதை தெளிவுபடுத்தினார்.
ஆனாலும் கூட ட்ரம்ப் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை குறிவைத்து துல்லியமான வான்வழித் தாக்குதல்களின் தொடர் ஆபரேஷன் மிட்நைட் ஹேமரை அங்கீகரித்தார். வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், இந்தத் தாக்குதல்களை ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பைக் கணிசமாகச் சீரழித்த முழுமையான அழிப்பு என்று விவரித்தார். “இது ஒரு முழுமையான வெற்றி… எங்கள் சொந்த உளவுத்துறை அதைச் சொல்வது மட்டுமல்லாமல், ஈரானிய வெளியுறவு அமைச்சரும் ஐக்கிய நாடுகள் சபையும் கூட ஒப்புக்கொண்டது,” என்று அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ந்து ராஜதந்திரத்தில் உறுதியாக உள்ளது என்பதை லீவிட் உறுதிப்படுத்தினார். ஈரானுக்கு “செறிவூட்டல் அல்லாத சிவில் அணுசக்தி திட்டத்திற்கு” மாறுவதை ஊக்குவிக்க கத்தார் போன்ற இடைத்தரகர்களுடன் அமெரிக்கா நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் இனி காமெனியின் உயிரைப் பறிக்காது என்று காட்ஸ் கூறினார். “போர் நிறுத்தத்திற்கு முன்பும், போர் நிறுத்தத்திற்குப் பிறகும் ஒரு வித்தியாசம் உள்ளது. இருப்பினும், எதிர்காலத்தில் மோதல் நடந்தால் ஒரு வலுவான பதிலடியைத் தூண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இஸ்ரேல் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுவதுமாகக் கண்டுபிடிக்கவில்லை என்பதை காட்ஸ் ஒப்புக்கொண்டாலும், தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி ஆசைகளை நீண்ட ஆண்டுகளுக்கு பின்னுக்கு தள்ளிவிட்டோம் என்றும், “நாங்கள் அதை நடக்க விடமாட்டோம்” என்று தெரிவித்தார்.
Read More : இந்தியா உடன் மிகப்பெரிய டீல் இருக்காம்.. ட்ரம்ப் கொடுத்த ஹிண்ட்.. என்னவா இருக்கும்?