முன்னாள் முதலமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்.. உடல் உறுப்புகள் செயல்படவில்லை..?

V.S. Achuthanandan

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாடு சீராக இல்லை எனவும், பல உறுப்புகல் சரியாக செயல்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த வி.எஸ். அச்சுதானந்தன்? ஒரு மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் கேரளாவின் முன்னாள் முதல்வர். 1923-ல் ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்த இவர், வறுமையில் இருந்து எழுந்து, தொழிலாளர் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்காக போராடியவர். புன்னப்புரா-வயலார் போர் உள்ளிட்ட பல எதிர்ப்புப்போராட்டங்களில் பங்கேற்று, பலமுறை சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

2006-ல் முதல்வராக பதவியேற்றார். 80 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் வாழ்நாளில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி என பன்முக சேவைகளை ஆற்றியவர். வயது மூப்பு காரணமாக, வி.எஸ்.அச்சுதானந்தன் கடந்த சில ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்து வருகிறார்.

Read more: Tn Govt: 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசுத்தொகை…!

Next Post

நடுக்கடலில் மர்ம கோட்டை!. 13 முறை தோற்ற சத்ரபதி சிவாஜி!. இன்றுவரை யாராலும் கைப்பற்ற முடியவில்லை!. பின்னணி என்ன?

Wed Jul 2 , 2025
இந்தியாவில் பல வரலாற்று கோட்டைகள் உள்ளன, அவற்றில் ஆழமான மர்மங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தைப் பாதுகாக்க கோட்டைகளைக் கட்டினார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோட்டைகளும், தனித்துவமான அம்சங்களையும் வரலாற்றுக் கதைகளையும் பெருமைப்படுத்துகின்றன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கடற்கரை கிராமத்தில் இதேபோன்ற ஒரு கோட்டை அமைந்துள்ளது, இது முருத் ஜஞ்சிரா கோட்டை என்று அழைக்கப்படுகிறது . கடல் மட்டத்திலிருந்து 90 அடி […]
Murud Janjira Fort 11zon

You May Like