TNPSC தேர்வர்களே… உங்களுக்கான தேர்வு முடிவுகள்…! வெளியான முக்கிய அறிவிப்பு…!

குரூப் 2, 2ஏ தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு கட்ட கலந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அந்தப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2, 2ஏ தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

மேலும் தேர்வர்கள் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in மட்டுமே அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நவம்பர் 1- ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!

Sat Oct 29 , 2022
தமிழகத்தில் நவம்பர் 1- ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, […]

You May Like