PM Kissan: விவசாயிகளுக்கு 13- வது தவணை ரூ.2,000 ஜனவரி மாதம் வழங்கப்படும்…! முழு விவரம் இதோ….

பிரதமர் கிசான் திட்டத்தின் 13- வது தவணை ஜனவரி மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தின் கீழ், முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்திற்கு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும்.. மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்திற்குள் வரவு வைக்கப்படும்.

இதற்கு 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் உரிமை கொண்ட சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 13 வது தவணையானது ஜனவரி மாதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சுமார் 8.42 கோடி விவசாயிகள் இந்த பி எம் கிசான் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.

Vignesh

Next Post

இந்த 17 கார்களும் அடுத்தாண்டு முதல் இயங்க தடை..!! அதிரடி அறிவிப்பு..!! ஷாக்கில் வாகன உரிமையாளர்கள்..!!

Mon Dec 19 , 2022
புதிய விதியின் காரணமாக 17 கார்கள் ஏப்ரல் 2023 முதல் இயங்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2023 முதல், இந்தியாவில் வாகனங்களுக்கு புதிய உமிழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவை RDE அல்லது Real Time Driving Emission Norms என்று அழைக்கப்படும். இது BS6 உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விதி வந்தவுடன், பல நிறுவனங்கள் தங்கள் டீசல் வாகனங்களை நிறுத்த உள்ளன. […]
கார் வாங்க போறீங்களா..? புத்தாண்டு முதல் அதிரடியாக உயரும் கார்களின் விலை..!! வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்..!!

You May Like