காதல் திருமணம் செய்து 9 நாளு தான் ஆகுது.. பூட்டிய வீட்டில் புதுமண தம்பதி இருந்த கோலம்..! ஆடிப்போன குன்றத்தூர்..

marriage death

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை, தளபதி தெருவில் விஜய்(25) என்ற பொறியாளர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், தன்னுடன் பணிபுரிந்து வந்த சாப்ட்வேர் பொறியாளரான யுவஸ்ரீ (24) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் வீட்டிலும் காதலிப்பதை தெரிவித்து, கடந்த 13-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.


நேற்று இரவு யுவஸ்ரீயின் தங்கை இவர்களது வீட்டுக்கு வந்தார். கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் யுவஸ்ரீ இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விஜய், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இவர்களை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய், யுவஸ்ரீ முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 9 நாட்களில் புதுமண தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: நகைக்கடன் வாங்குவோருக்கு பேரதிர்ச்சி..!! கடன் தொகையை குறைக்க வங்கிகள் முடிவு..!!

English Summary

It’s been 9 days since the love marriage.. The newlyweds were in a locked house..! Kundrathur went crazy..

Next Post

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் மாயம்..!! நேரில் பார்த்து கதறி துடித்த குடும்பம்..!! புதுக்கோட்டையை உலுக்கிய சம்பவம்..!!

Tue Dec 23 , 2025
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளாபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா (28), தனது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் நேற்று காலையும் ஆடு, மாடுகளுடன் மேய்ச்சலுக்குச் சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் […]
Puthukottai Crime 2025

You May Like