பெண்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கவும், அவர்களின் வணிகக் கனவுகளை நனவாக்கவும் மத்திய அரசு லக்பதி தீதி யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பெண்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்களைப் பெறலாம், இதன் மூலம் அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்தவோ முடியும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இத்திட்டத்தின் மூலம் கடன் பெரும் பெண்களுக்கு கடன் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும், வட்டி இல்லை.
குறிக்கோள்: பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதும், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்ட உதவுவதும்.
பயனாளிகள்: சுய உதவிக்குழுக்களுடன் (SHG) இணைந்த பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
தகுதி வரம்புகள்: பெண்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர்கள் மகளிர் சுயஉதவிக் குழுவுடன் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? பெண்கள் ஏதேனும் ஒரு சுய உதவிக் குழுவில் (SHG) சேர வேண்டும். உங்கள் வணிகத் திட்டத்தைத் தயாரிக்கவும். அருகிலுள்ள வங்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அல்லது சுய உதவிக்குழு அலுவலகத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று தேவையான ஆவணங்களுடன் நிரப்பவும். விண்ணப்பப் படிவத்துடன் ஆதார் அட்டை, பான் அட்டை, வருமானச் சான்று, குடியிருப்புச் சான்று, வங்கிக் கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண் ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
திட்டத்தின் நன்மைகள்: பெண்களுக்கு வட்டி இல்லாமல் கடன்கள் வழங்கப்படுகின்றன. பெண்கள் தையல், அழகு நிலையம், உணவு உற்பத்தி போன்ற சிறு தொழில்களைத் தொடங்கலாம். பெண்களுக்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, தையல் போன்ற பல்வேறு திறன்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் நிதி சுதந்திரம் பெறலாம்.
Readmore: திருமணமான மகளுக்கு இந்த 3 பொருட்களை ஒருபோதும் கொடுக்க கூடாது..!! வாஸ்து சொல்றத கேளுங்க..