ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை அங்கீகரிக்கவும் இல்லை!… ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை!… மத்திய அரசு!

ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்றும் இதனை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.


ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி 2017ம் ஆண்டு முதல் போட்டியை நடத்தி வருகிறது. மேலும், இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‘பீட்டா’ உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அது தொடர்பான வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவையில் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார். மேலும், கிராமப்புற மற்றும் பழங்குடியிர்களை ஊக்குவிக்கும் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய அரசு இத்திட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த அமைச்சகத்தின் கீழோ அங்கீகரிக்கவில்லை என்றும் மாட்டுவண்டி பந்தயம்,  ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் அரசிடம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

KOKILA

Next Post

2023 ஐபிஎல்!... சீசன் முழுவதும் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யமாட்டார்!... மைக் ஹஸ்ஸி அதிர்ச்சி தகவல்!...

Wed Mar 29 , 2023
இடது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, 2023 ஐபிஎல் சீசன் முழுவதும் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்யமாட்டார் என்றும் பேட்ஸ்மேனாக மட்டுமே அவரை பயன்படுத்த போவதாகவும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார். ஐபிஎல் 16-ஆவது சீசனின் முதல் போட்டி வரும் 31-ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடக்க விழா வரும் 31ம் தேதி அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இந்த […]
ben stokes

You May Like