சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் சென்னையில் உள்ள மிக முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் என்பதால், இந்த கோயிலில் பணியாளர்கள் நியமனம் அறநிலையத்துறையால் செய்யப்படுகிறது.
அந்த வகையில் தமிழ் ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இந்து சமய அற நிலைஅய்த்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பணியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:
1) தேவார ஆசிரியர் – 1
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
கல்வித் தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய எந்தவொரு நிறுவனங்களிலும் நடத்தப்படும் மூன்றாண்டு “பன்னிரு திருமுறை” பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்கும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2) இசை ஆசிரியர் – 1
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
கல்வித் தகுதி: குரலிசையில் மூன்றாண்டு பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
3) தமிழ் ஆசிரியர் – 1
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
கல்வித் தகுதி: தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலைக் கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது? ஆன்லைன் மூலமாக www.hrce.tn.gov.in, www.vadapalaniandavar.hrce.tn.gov.in விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தை வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழனி, சென்னை – 600 026 (Deputy Commissioner / Executive Officer).
Read more: டின்னர் சாப்பிட்ட பிறகு ஒருபோதும் இந்த தவறுகளை செய்யாதீங்க.. உங்களுக்கு தான் ஆபத்து!