வருமான வரித்துறையின் மும்பை பிரிவின் கீழ் செயல்படும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (ITAT), இளம் வல்லுநர்கள் திட்டம் – 2023ன் கீழ் மொத்தம் 11 காலிப்பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த பணியிடங்களில் தேர்வாகும் நபர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உதவியாக பணியாற்றுவதுடன், வருமான வரி தொடர்பான ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 2025 டிசம்பர் 15-ம் தேதியின்படி, 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் சட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- அல்லது பட்டய கணக்காளர் (CA) பதவியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதார்கள் 3 ஆண்டு சட்டப்படிப்பு (LLB), 5 வருட ஒங்கிணைந்த LLB அல்லது முதுகலை சட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சிஏ தகுதிப்பெற்றவர்களில் வரி விதிப்பு தொடர்பாக article-ship முடித்தவர்கள், சட்டப்படிப்பு மாணவர்களின் வரி விதிப்பு தொடர்பாக ஆய்வு அல்லது திட்டங்களை மேற்கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- நல்ல கம்யூனிகேஷன் திறன் அவசியமாகும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவாரக்ள். விண்ணப்பதார்களின் இருந்து தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? வருவான வரித்துறை இளம் வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://www.incometaxmumbai.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முழுமையான விண்ணப்பத்தை நிரப்பு தேவையான ஆவணங்களுடன், தபால் வழியாகவும் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Office of Addl. Commissioner of Income Tax (HQ) Coordination Room No. 335, Aayakar Bhavan, Maharshi Karve Road, Mumbai – 400 020, Maharashtra
விண்ணப்பிக்க கடைசி நாள் 05.01.2026 மாலை 6 மணி வரை.
Read more: குளிர்காலத்தில் வயிறு ஆரோக்கியமாக இருக்கணுமா? அப்ப, இவற்றை மட்டும் சாப்பிடுங்கள்!



