தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (Tamil Nadu Animal Welfare Board – TNAWB) மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கால்நடை மருத்துவர்களை பணியமர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் படுகின்றனர்.
காலிப்பணியிடங்கள்:
- விலக்கு நல அலுவலர் – 38
- கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் – 38
வயது வரம்பு:
* விலக்கு நல அலுவலர் பதவிக்கு 35 முதல் 55 வயது வரை இருக்கலாம்.
* கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு 40 வயதிற்கு குறைவானவராக இருக்க வேண்டும்.
1. மாவட்ட விலங்கு நல அலுவலர் பதவிக்கான தகுதிகள்:
கல்வித்தகுதி: கால்நடை அறிவியலில் இளங்கலை பட்டம் (B.V.Sc. & AH) அல்லது முதுகலை பட்டம் (M.V.Sc.) பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தது 10 ஆண்டுகள் வரை பணியனுபவம் இருக்க வேண்டும். விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் விலங்கு நல பராமரிப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
மற்ற தகுதிகள்:
- தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவராக இருக்க வேண்டும்.
- அரசு நலத்திட்டங்கள், விலங்கு நல சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
- கணினி பயன்பாடு மற்றும் அறிக்கை தயாரித்தல் குறித்தும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் நன்றாகத் தெரிய வேண்டும்.
2. கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கான தகுதிகள்:
கல்வித்தகுதி: B.V.Sc. & AH பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அனுபவம்: விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு சிகிச்சையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அறுவை சிகிச்சை, மகப்பேறியல் (Gynecology) மற்றும் மகளிர் மருத்துவம் தொடர்பான துறைகளில் M.V.Sc. பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை பெறுவர்.
மொழித் திறன்: தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாகப் படித்து, எழுதிப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.56,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://tnawb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு நவம்பர் 14-ம் தேதி முதல் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், எண்.13/1, 3வது கடல் நோக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை – 600 041.



