தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், மாவட்ட வாரியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிட விவரம்: ஊராட்சி ஒன்றிய அளவில் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பம் பெறப்படுகிறது.
வயது வரம்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் நடைபெறும் ஊராட்சி ஒன்றிய வேலைவாய்ப்புக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.07.2025 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
- குறைந்தபட்சம்: 18 வயது
- பொதுப் பிரிவு: 32 வயது
- பிசி / எம்பிசி: 34 வயது
- எஸ்சி / எஸ்டி: 37 வயது
ஈப்பு ஓட்டுநர்
- குறைந்தபட்சம்: 18 வயது
- பொதுப் பிரிவு: 32 வயது
- பிசி / எம்பிசி: 34 வயது
- எஸ்சி / எஸ்டி: 42 வயது
கல்வித்தகுதி:
* அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
* பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
* ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
* அலுவலக உதவியாளர் பதவிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பதிவறை எழுத்தர் பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
* இரவு காவலர் பதவிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
* ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.
கடைசி தேதி: செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.