தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை.. ரூ.71,900 வரை சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

job 1

தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மைய அச்சகம், அரசு கிளை அச்சகம், வெளியூர் அலகுகள் என பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.


பணியிட விவரம்:

  • உதவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன் (Assistant Offset Machine Technician) – 19
  • இளநிலை மின்வினைஞர் (Junior Electrician) – 14
  • இளநிலை கம்மியர் (Junior Mechanic) – 22
  • பிளம்பர் கம் எலெக்ட்ரீஷியன் (Plumber Cum Electrician) – 1

வயது வரம்பு: அரசுத் துறையில் உள்ள இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 01.07.2007 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் (OC): 32 வயது

பிசி (BC): 34 வயது

எம்பிசி/ டிஎன்சி (MBC/DNC): 34 வயது

எஸ்சி, எஸ்டி (SC/ST): 37 வயது

கல்வித்தகுதி:

தவி ஆப்செட் மிஷின் டெக்னீஷியன்

  • குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அச்சிடுதல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது லித்தோ ஆஃப்செட் இயந்திரத்தில் தொழில்நுட்ப வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • டிப்ளமோ பெற்றவர்கள் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை மின்வினைஞர் (Junior Electrician)

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • எலெக்ட்ரீஷியன் பயிற்சி சான்றிதழ் அல்லது தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை கம்மியர் (Junior Mechanic)

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • மெக்கானிக்கலில் ஐடிஐ தொழிற்பயிற்சி அல்லது அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளம்பர் கம் எலெக்ட்ரீஷியன் (Plumber-cum-Electrician)

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • பம்பிங் தொடர்பான ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு மாதம் நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் நடைமுறை:

* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி மற்றும் தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் முதலில் தேர்வு செய்யப்படுவார்கள்.

* தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

* சான்றிதழ் சரிபார்ப்பிற்காக விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

* இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை சலுகைகள் வழக்கம்போல் பின்பற்றப்படும்.

* முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.stationeryprinting.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தபால் உறையின் மேல் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்” குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர்,
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை,
ஆணையரகம்,
110, அண்ணா சாலை,
சென்னை – 2.

கடைசி தேதி: விண்ணப்பத்தை 19.09.2025 தேதி மாலை 5.30 மணிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: #Breaking : மீண்டும் மேக வெடிப்பு..! வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடுகள்..! பலர் மாயம்? தொடரும் மீட்புப் பணிகள்..

English Summary

Job in the printing industry in Tamil Nadu.. Salary up to Rs.71,900.. Great opportunity

Next Post

Flash : மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! தமிழக அரசு அறிவிப்பு..!

Sat Aug 23 , 2025
சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து பலியான பெண் தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.. அந்த வகையில் சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது.. அவ்வப்போது சிறிது நேரம் மழை விட்டாலும் விடிய விடிய மழை தொடர்ந்து வந்தது.. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, […]
rain sanitation worker

You May Like