திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.. 760 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!

BEL Job 2025 1

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு திருச்சியில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (BHEL) நிறுவனத்தில் மத்திய அரசின் பொதுத்துறை தொழிற்பயிற்சி வாய்ப்பு காத்திருக்கிறது. மொத்தம் 760 இடங்கள் இங்கே நிரப்பப்பட உள்ளன, இதில் பட்டதாரிகள், டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் பயிற்சி பெறலாம்.


பணியிட விவரம்:

  • ஐடிஐ பிரிவில் – 550 பணியிடங்கள்,
  • டிப்ளமோ பிரிவில் – 90 பணியிடங்கள்,
  • பட்டப்படிப்பு தகுதி பிரிவில் – பணியிடங்கள் என மொத்தம் 760 காலிப்பணியிடங்கள்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 27 வயது வரை இருக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி:

* Trade அப்ரண்டிஸ்: பள்ளி படிப்பிற்கு பின்னர், அந்தந்த பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

* டெக்னீஷியன் அப்ரண்டிஸ்: அந்தந்த பாடப்பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்: அந்தந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* HR உதவியாளர்: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.A முடித்திருக்க வேண்டும்.

* முழு நேர கல்வியில் படித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம், தொலைத்தூர கல்வியில் முடித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

உதவித்தொகை:

Trade அப்ரண்டிஸ் (ஐடிஐ தகுதி): தொழிற்பயிற்சி விதிமுறைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்.

டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (டிப்ளமோ தகுதி): மாதம் ₹11,000 உதவித்தொகை.

பட்டப்படிப்பு அப்ரண்டிஸ்: மாதம் ₹12,000 உதவித்தொகை.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? ஐடிஐ தகுதி பெற்றவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்திலும், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு தகுதி உள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, https://trichy.bhel.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: “சனிக்கிழமை வரை பேச்சை மனப்பாடம் செய்யணும்.. விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்ல.. வேடிக்கை காட்ட வந்த சிங்கம்..” பங்கம் செய்த சீமான்..!

English Summary

Job opportunity at Trichy Bell Company.. 760 vacancies.. Apply immediately..!

Next Post

“நீ அவன் கூட மட்டும் தான் உல்லாசமா இருப்பியா”..? கள்ளக்காதலியை கரெக்ட் செய்ய முயன்ற விவசாயி..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!

Fri Sep 12 , 2025
சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65), கடந்த மாதம் 7-ஆம் தேதி தனது மாட்டுக்கொட்டகையில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் மரக்கட்டை அல்லது இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செல்லப்பனின் மனைவி பெருமாயியிடம் விசாரித்தபோது, செல்லப்பன் அருகில் வசிக்கும் சங்கீதா என்ற பெண்ணிடம் பேசுவார் என்ற தகவல் கிடைத்தது. […]
Fake Love 2025 1

You May Like