இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) துணை நிறுவனமான AAICLAS நிறுவனத்தில் Security Screener (Freshers) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 227 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 176 இடங்கள் உள்ளது.
என்னென்ன தகுதி? இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஏதேனும் ஒரு டிகிரி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியை வாசிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பு 27 ஆண்டுகள், அரசு விதிகளின்படி சில பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படைட்டில் தளர்வுகள் உண்டு.
ஒப்பந்த அடிப்படையில் வேலை: முதல் ஆண்டு ரூ.30,000 சம்பளம் வழங்கப்பட்ம். 2ம் ஆண்டு ரூ.32,0003ம் சம்பளம் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டு முதல் ரூ.34,000 என வழங்கப்படுகிறது. தேர்வை பொறுத்தவரை மூன்று கட்டங்களாகநடைப்பெற உள்ளது.
தேர்வு செய்யபடும் முறை:
1. Shortlisting,
2. Physical Test / Body Fitness Check,
3. ஆவண சரிபார்ப்புஇந்த அனைத்திலும் வெற்றி பெறுவோர் மட்டுமே பணிக்கு சேர்க்கப்படுவர்.
விமான நிலைய பாதுகாப்பு துறையில் நுழைய விரும்பும் பட்டதாரிகள், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும். குறுகிய கால ஒப்பந்த வேலை வாய்ப்பு என்றாலும், அது அரசு அமைப்பின் கீழ் செயல்படும் நம்பகமான அமைப்பென்பதால் சிறந்த அனுபவமாக அமையும். மேலும் இது, விமான நிலையங்களின் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பணியாகும்
Read more: கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடன் வந்த கப்பலில் தீ விபத்து.. 4 பேர் காணவில்லை..!!