மத்திய அரசு துறையில் வேலை.. 3,131 காலிப்பணியிடங்கள்.. ரூ.92,300 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..

job

மத்திய அரசில் உள்ள லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளில் தேசிய அளவில் 3,131 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.


கல்வித்தகுதி: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறையின் கீழ் உள்ள டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் கணிதம் பாடம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனை தவிர இதர துறைகளில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு 01.01.2026 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபடியாக 27 வரை நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.1999 தேதியில் இருந்து 01.01.2008 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

சம்பள விவரம்:

* லோவர் டிவிசன் கிளார்க் பதவிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

* டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையும், நிலை 5 கீழ் வரும் இடங்களுக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 12-ம் வகுப்பு தகுதிக்கான எஸ்எஸ்சி தேர்வு கணினி வழியில் இரண்டு கட்டமாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஆங்கிலம், பொது அறிவு, நுண்ணறிவு மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் 100 கேள்விகள் கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மொத்தம் 60 நிமிடங்கள் இத்தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) நடைபெறும். 0.50 மதிப்பெண்கள் நெகட்டிங் மார்க் வழங்கப்படும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தகுதி பெறுவார்கள். இரண்டு கட்ட தேர்வு இரண்டு பகுதியை கொண்டு நடைபெறும். இதில் கணிதம், பொது விழிப்புணர்வு, ஆங்கிலம், கணினி திறன் தேர்வு ஆகியவை கொண்டு முதல் பகுதி தேர்வு நடைபெறும். அதே தினத்தில் இரண்டாம் பகுதியில் திறன் தேர்வு/ டைப்பிங் தேர்வு நடைபெறும். இத்தேர்வு கொள்குறி முறையில் நடைபெறும். இறுதியாக இரண்டு கட்டத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் வெளியிட்டு, பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.07.2025

Read more: அவசரகால கொள்முதலுக்காக 28 உள்நாட்டு ஆயுத அமைப்புகளை இராணுவத்திற்கு வழங்குகிறது DRDO..!!

Next Post

மிகவும் மெலிந்து.. ஆள் அடையாளமே தெரியாமல் போன அஜித்.. ஷாக்கான ரசிகர்கள்.. வைரல் போட்டோ..

Tue Jun 24 , 2025
நடிகர் அஜித்தின் புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார், பைக் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.. இந்த […]
152142919 1

You May Like