தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிருஷ்ணகிரி கோட்டத்தின் மூலம் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு ஒன்றியத்தில் 32 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாரண்டஅள்ளி நகர பஞ்சாயத்துகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைதுறை தருமபுரி – ராயகோட்டை புதியச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் வரும் 14.03.2023 முதல் 17.03.2023 வரை ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே, மேற்கண்ட 4 தினங்களுக்கு உள்ளூர் நீராதாங்களை பயன்படுத்தி கொள்ளவும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.