முக்கிய அறிவிப்பு…! ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டம் வரும் 14 முதல் 17-ம் தேதி வரை கிடையாது…!

தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, கிருஷ்ணகிரி கோட்டத்தின்‌ மூலம்‌ பராமரித்து வரும்‌ ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டத்தின்‌ மூலமாக தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள பாலக்கோடு ஒன்றியத்தில்‌ 32 கிராம பஞ்சாயத்துகள்‌ மற்றும்‌ மாரண்டஅள்ளி நகர பஞ்சாயத்துகளுக்கு தினசரி குடிநீர்‌ வழங்கப்பட்டு வருகிறது.


தேசிய நெடுஞ்சாலைதுறை தருமபுரி – ராயகோட்டை புதியச்சாலை விரிவாக்க பணிகள்‌ நடைபெற்று வருவதால்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வாரியத்தின்‌ பராமரிப்பில்‌ உள்ள ஒகேனக்கல்‌ கூட்டு குடிநீர்‌ திட்டத்தில்‌ குடிநீர்‌ குழாய்களை மாற்றி அமைக்கும்‌ பணி நடைபெறவுள்ளதால்‌ வரும்‌ 14.03.2023 முதல்‌ 17.03.2023 வரை ஒகேனக்கல்‌ குடிநீர்‌ வழங்க இயலாது. எனவே, மேற்கண்ட 4 தினங்களுக்கு உள்ளூர்‌ நீராதாங்களை பயன்படுத்தி கொள்ளவும்‌, பொதுமக்கள்‌ குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

அடுத்த மாதம் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை.. எந்தெந்த நாட்கள் தெரியுமா..? முழு பட்டியல் இதோ..

Sat Mar 11 , 2023
வரும் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். […]
bankk

You May Like