கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவி மற்றும் மாமியாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் மது புழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் அவரை விட்டுப் […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சியர் சரயு, பொதுமக்களுக்கு அணிவித்த தலைக்கவசங்களை, சிறிது நேரத்தில் அரசு ஊழியர்கள் திரும்பப்பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் காண்போரை முகம் சுழிக்க வைத்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே மாதம் 2023இல் எடுத்த கணக்கெடுப்பின்படி, 279 சாலை விபத்துகளில், 307 பேர் இறந்துள்ளதாகவும், 757 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையில், அம்மாவட்டத்தின் […]

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசு கல்குவாரியில் 22 வயது இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் கள்ளத்தொடர்பு காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் தலைமறைவாக இருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசஹள்ளி பகுதியில் மூடப்பட்டிருந்த கல்குவாரியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் […]

குடிபோதையில் பெற்ற மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கடுகானப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகன் இருந்தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்த நிலையில் சந்தோஷ் தனது மகனுடன் வசித்து […]

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே நேற்று நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் சுமார் 200 பேர் கிருஷ்ணகிரி […]

குடும்ப தகராறில், சொந்த கணவனையே கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்த மனைவியால், அதிர்ந்து போன மாமியார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (45). எலெக்ட்ரிசியானான இவரது மனைவி ஜெயந்தி (36). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ரங்கசாமியின் மகன் சந்தோஷ் வேலைக்கு சென்று விட்டார். அப்போது, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

கிருஷ்ணகிரி அருகே, தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தன்னுடைய கள்ளக்காதலனோடு சேர்ந்து, கொலை செய்து, கல்லை கட்டி கிணற்றில் இறக்கிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நமது சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ், தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மகாராஜாகடை அருகே வசித்து வந்தார். மேலும், இவர் கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார் என்றும் கூறப்படுகிறது. அவருடன், தன்னுடைய இளம் மனைவியையும் கல்குவாரிக்கு வேலைக்கு […]

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை பகுதியில் கடந்த 29 ஆம் தேதி தனியாருக்கு சொந்தமாக இருந்த பட்டாசு குடோனில் உண்டான வெடி விபத்து காரணமாக,, அந்த கடையின் உரிமையாளர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து காரணமாக, நடந்த விசாரணையில், அருகில் உள்ள உணவகத்தில் இருந்த சிலிண்டர் கசிந்ததன் காரணமாகவே இந்த பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. […]

கிருஷ்ணகிரி அருகே இருக்கின்ற கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஜெகன்(28) இவர் ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளர். இவரும், அவதானப்பட்டி அருகில் இருக்கின்ற முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த மார்ச் […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரைச்சேந்தவர் கேசவன்(45) இவர், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். இந்த நிலையில் தளி அருகே இருக்கின்ற என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் இவரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது அதனை வசூலிக்க இருசக்கர வாகனத்தில் கேசவன் சென்று கொண்டிருந்தார். இவர் கே.மல்லச்சந்திரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் கேசவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் […]