நீதிபதிகளே..!! இனி யாரும் இப்படி செய்யாதீங்க..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

உயர்நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும் போது, சால்வை, நினைவு பரிசுகள் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் ஏராளமான மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. குற்றவியல் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்கள் என்ற வகையில் மாவட்ட வாரியாகவும், தாலுகா வாரியாகவும் நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்ட நீதிபதியாக பணியில் சேரும் ஒருவர் பணி மூப்பின் காரணமாக ஐகோர்ட் நீதிபதியாகவும் பதவி உயர்வு பெறுவார்கள். இந்நிலையில், மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, உயர் நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்பதற்காக புறநகர் பகுதியில் சாலைகளில் காத்திருக்க கூடாது என்றும் பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட எந்த சலுகைகளுக்காகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளுக்கு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்த காரணத்தை கொண்டும் நீதிமன்ற நேரத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் நேரடியாக எந்த கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுத்துறை மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில், கருப்பு நிற கோட், கருப்பு நிற டை அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

Breaking News:கணவனின் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு இருக்கிறது….! நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!

Sun Jun 25 , 2023
இல்லத்தரசிகளின் பணியை கணவரின் 8 மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும், கணவன் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உண்டு எனவும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் வேலை பார்த்து அதன் மூலமாக வாங்கிய சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவன் ஒருவர் தொடர்ந்து வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. மேலும் கணவனின் ஊதியத்தின் மூலமாக வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம […]
டெண்டர் முறைகேடு..! எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது..! - அறப்போர் இயக்கம்

You May Like