மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசின் 37 வகையான துறைகளில் மொத்தம் 14,582 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்: உள்துறை அமைச்சகம், அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, ஐபி உள்ளிட்ட துறைகளில் அஸ்சிஸ்டண்ட் செக்ஷன் ஆபீசர்( குரூப் பி) , வரித்துறையில், குரூப் சி பணியிடங்கள் என 37 வகையான பணியிடங்களில் மொத்தம் 14,582 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வி தகுதி மாறுபடும். பொதுவாக டிகிரி முடித்தவர்களுக்கான காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம்: குரூப் பி நிலை பணியிடங்களுக்கு பே லெவல் 7 விகிதப்படி ஊதியம் வழங்கப்படும். அதாவது, ரூ. 44,900 – ரூ1,42,400 வரை ஊதியம் அளிக்கப்படும். குரூப் சி நிலை பணியிடங்களுக்கு ரூ.29,200 – முதல் ரூபாய் 92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழியில் இரண்டு கட்ட தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவை அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை தெரிந்துகொள்ள: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_cgl_2025.pdf
Read more: விபத்துக்குள்ளான விமானத்தில் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டி தான்..!! இதன் முக்கியத்துவம் என்ன..?