ஆம்லெட், ஆப்பாயில் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!!! முட்டை விலை வரலாறு காணாத உயர்வு…

நாமக்கல்லில் இருந்து தான் முட்டை, தமிழகம் முழுவதும் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த முட்டையின் கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பிக்குழு நிர்ணயம் செய்து வருகிறது. கடந்த மாதம் டிசம்பர்23-31 வரை முட்டையின் கொள்முதல் விலை 5.50காசுகள் இருந்த நிலையில், நேற்றைய தினம் கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்த்தி 5.55க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்முதல் விலை இன்று முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

kadaknath egg 500x500 1

சில்லறை விற்பனையில் ஒரு முட்டை 5.75க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, தற்போது கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், சில்லறை விற்பனையின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோழிப்பண்ணை வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் தான் முட்டை ஒன்றுக்கு 5.50ஆக இருந்தது, மேலும் அவ்வப்போது விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டது. தற்போது 5 காசுகள் அதிகரித்து 5.75 என்பது வரலாறு காணாத விலை உயர்வாகும். வட மாநிலங்களில் குளிர் நிலவுவதன் காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

இவர்களுக்கும் 10 மற்றும்‌ 12-ம்‌ வகுப்புக்கு இணையான சர்டிபிகேட்...! கால அவகாசம் குறைவு...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Mon Jan 2 , 2023
இது தொடர்பாக தருமபுரி அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஐடிஐ படிப்பவர்களுக்கு 10 மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழ்‌ தரப்படும்‌ என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. அதன்படி 8-ம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐ-களில்‌ சேர்ந்து படிப்பினை முடிப்பவர்களுக்கு 10ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌, 10ஆம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐககளில்‌ சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 12ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ பள்ளிக்கல்வித்துறை […]
tn goverment

You May Like