கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்.. நாளை முதல் விசாரணையை தொடங்குகிறது மனித உரிமை ஆணையம்..

பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை குழு விசாரணை நடத்த உள்ளது.

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து அந்த கல்லூரியில் பாலியல் தொந்தரவு வழங்கிய பேராசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அந்த கல்லூரியின் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.


இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக பேராசிரியகள் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து கலாஷேத்ராவில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. இதனிடையே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்….

இதனிடையே கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன்மீது புகார் அளித்திருந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் ஹரி பத்மனை கைது செய்தனர்.. இதனை தொடர்ந்து ஹரி பத்னம்னின் மனைவி தனது கணவரின் மீது எந்த தவறும் இல்லை என்றும், மாணவிகளின் போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாகவும் கூறியிருந்தார்..

இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில் நாளை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை குழு விசாரணை நடத்த உள்ளது.. இந்த குழு விசாரணை செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.. அந்த வகையில் நாளை முதல் மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை தொடங்க உள்ளது..

RUPA

Next Post

G pay பயனாளர்களுக்கு ₹88000/- ரூபாய்! தவறாக அக்கவுண்ட் மாற்றி அனுப்பிய கூகுள் பே! அச்சத்தில் பயனாளர்கள்!

Mon Apr 10 , 2023
இணையதளத்தின் வழி பணி பரிமாற்றத்திற்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் பே என்ற செயலி 88 ஆயிரம் ரூபாய் பணத்தை சிலப்பேரின் வங்கி கணக்குகளுக்கு தவறாக செலுத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கூகுள் பே செயலி பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். இது பயன்படுத்துவதற்கும் எளிது எந்த நேரத்திலும் யாருக்கும் பணம் அனுப்பவும் செய்யலாம் பணம் பெற்றுக் கொள்ளவும் உதவும். இத்தய கூகுள் […]
IMG 20230410 WA0414

You May Like