நடிகர், நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் இன்றைய காலகட்டத்தில் சாதாரண ஒன்றாக இருந்தாலும் கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன் அவை பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்த கிசு கிசுக்களுக்கு பெயர் போன நடிகர் என்றால், அவர் கமல்ஹாசன் தான். இளம் நடிகராக இருந்த காலத்திலேயே பல நடிகைகளுடன் கிளுகிளுப்பாக இருந்தார் என்ற செய்தி அப்போதே பெரிதளவில் பேசப்பட்டது. தனது படங்களில் முத்தக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமல், அதை பதட்டமே இல்லாமல் செய்வார் என அவருடன் நடித்த நடிகைகளே கூறி இருக்கின்றனர். பல நடிகைகளை பந்தாடி பதம் பார்த்திருக்கிறார் என்ற சர்ச்சை இன்று வரை அவர் மீது இருக்கிறது. ஆனால், இது போன்ற சர்ச்சைகளை ஒருபோதும் கமல் மறுத்ததில்லை.
இதற்கிடையே நடிகை கௌதமி, தன்னுடைய மகள் சுப்புலட்சுமியின் பாதுகாப்பிற்காக தான் கமலை விட்டு பிரிந்தேன் என்ற புது குண்டு ஒன்றை கமலின் தலையில் போட்டுள்ளார். கௌதமியின் இந்த பேச்சு பரபரப்பை கிளப்பி வருகிறது. கௌதமி இப்படி சொல்லும் அளவிற்கு சுப்புலட்சுமியை கமல் என்ன செய்தார் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், கமல்-கௌதமி விவகாரம் குறித்து திரை விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், “கமலை விட்டு பிரிந்து இத்தனை வருடங்களுக்கு பின்னர் இதை பற்றி ஏன் கௌதமி சொல்ல வேண்டும். இருவரும் தற்பொழுது அரசியலில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் கமல் மீது ஒரு நெகட்டிவ் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கௌதமி நினைத்திருக்கிறார். கமலை எடுத்துக் கொண்டால் பல படங்களில் நடிகைகளுக்கு லிப் கிஸ் கொடுத்தவர். அதுமட்டுமின்றி மருதநாயகம் படத்தில் டெஸ்ட் பிலிமில் நிர்வாணமாக போஸ் கொடுத்தவர்.
கமல் மீது பல சர்ச்சைகள், கிசுகிசுக்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால், அதை பற்றி எல்லாம் கமல் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. ஏனெனில், நான் அப்படி தான் என்று ஆரம்ப காலத்தில் இருந்தே நமக்கு காட்டி வருகிறார். அப்படி இருக்கையில் கௌதமியின் இந்த நெகட்டிவ் பேச்சு கமலுக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
Read More : இந்த மாதிரி AC-யை பயன்படுத்தினால் கரண்ட் பில் அதிகம் வராது..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!