குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்த கணவன்..! மாந்தோப்புக்குள் அரங்கேறிய கொடூரம்..!

போச்சம்பள்ளி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான கணவனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வெள்ளிமலை பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து(40). கூலித்தொழிலாளியான இவருக்கு சீதா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது உறவினர்கள் அவர்களை சமதானம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக கணவனை பிரிந்து சீதா, தனது குழந்தைகளுடன் செங்கழநீர்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

ஆனால், சின்னமுத்து தன்னுடன் வந்து சேர்ந்து வாழும்படி சீதாவிற்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22ம் தேதி செங்கழநீர்பட்டிக்கு சென்ற சின்னமுத்து, சீதாவை தன்னுடன் வந்து வாழும்படி அழைத்துள்ளார். வழக்கம்போல் சீதா வரமறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, சீதாவின் அக்கா மகனான வேடியப்பனிடம் இருவரும் சென்று சமரசம் பேசிவிட்டு, வீட்டிற்கு போகலாம் என சீதா கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் வேடியப்பன் வேலை செய்யும் மாந்தோப்புக்கு சென்றுள்ளனர். அங்கு, இல்லாததால், வீட்டுக்கு போகலாம் என சின்னமுத்து தெரிவித்துள்ளார். அப்போது, சீதா வரமறுக்கவே, ஆத்திரமடைந்த சின்னமுத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சீதாவின் வயிற்றில் சரமாரி குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சீதா துடி துடித்து உயிழந்தார். பின்னர் சின்னமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

நேற்று மாந்தோப்புக்கு வந்த வேடியப்பன், சீதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து, போச்சம்பள்ளி போலீசாருக்கு வேடியப்பன் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சீதாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவன் சின்னமுத்துவை,  தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

shyamala

Next Post

அடிக்கடி கை, கால்களில் வியர்வை வெளியேறுகிறதா..? வீட்டிலேயே இதை செய்து பாருங்கள்..!!

Thu Apr 25 , 2024
நம்மில் பலருக்கு அடிக்கடி கை, கால்களில் வியர்வை வெளியேறும். நடக்கும்போது கால்களின் வியர்வை ஈரம் தரையில் படிவத்தை பார்த்திருப்பீர்கள். கைகளில் அதிகளவு வியர்க்கும்போது அவை ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற நோய். பயம், பதட்டம் ஏற்படும்போது கை, கால்களில் அதிகளவு வியர்கத் தொடங்கும். இவ்வாறு வெளியேறும் வியர்வையை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். * ஒரு கப் அளவு சர்க்கரை சேர்க்காத பிளாக் […]

You May Like