நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார். அதேபோல இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக ஊரோரம் புளியமரம் பாடல் இந்த படத்தில் ஒரு ஹைலைட் பாடலாக அமைந்திருந்தது. அந்த பாடலை பாடிய நாட்டுப்புறப்பாடகி காரியாபட்டி லட்சுமி அம்மாள். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். கிராமிய பாடல்களை பாடி தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலம் ஆனார்.
இந்த நிலையில் 75 வயதான லட்சுமி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் மறைவால் அவரின் ரசிகர்கள், கிராமிய கலைஞர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். இவர் கலைமாமணி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more: சுரங்கப்பாதைக்குள் 2 ரயில்கள் மோதி விபத்து.. 70 தொழிலாளர்கள் காயம்.. உத்தரகாண்டில் சோகம்..!



